Showing posts with label பொது கவிதைகள். Show all posts
Showing posts with label பொது கவிதைகள். Show all posts

Thursday, November 28, 2013

கர்வம்

நமக்கு தான் எல்லாம் தெரியும்.
மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது
என்று நினைக்காதீர்கள்......
நமக்கு
அனைத்தையும் கற்றுகொடுத்தவர்களே

மற்றவர்கள் தான்......
Source:என்னை தேடும் நான்

Saturday, August 31, 2013

இனிமையான ஜோடிகள்

உங்களுக்கு தெரியுமா?
உலகில் மிக இனிமையான ஜோடி யார்? என்று


புன்னகை மற்றும் கண்ணீர் ...
 
அவர்களை சந்திப்பது அரிது
ஆனால் அவர்கள் சந்திக்கும் போது,
நிகழ்வுகள் மறக்கமுடியாதாகிறது.

Thursday, August 29, 2013

அன்பு

எல்லோரிடமும்
அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே.....!!!
யாரிடமும்
அன்பை பெற்றுக்கொண்டு
ஏமாற்றி விடாதே.....!!!

                    -விவேகானந்தர்...

Tuesday, August 27, 2013

இருளில் இரை தேடும் வெள்ளை புறா



இன்றும் உன் இனம்
அகதியாய்,அடிமையாய்
சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டு தான் இருக்கிறது..
மூவர்ணக் கொடியை
இதயத்தில் ஏற்றியும்
அடிமையாய் தான் வாழ்கிறோம்..
இருளில் இரை தேடும் வெள்ளை புறா

என்ன சாதிப்பாய்


விளை நிலங்கள்
விலை நிலங்களாயின
நீந்தி மகிழ்ந்த நீரோடையை
காணவில்லை..
பிற உயிர்களின் வாழ்விடத்தை
அபகரித்து மிருகமானாய்..
இயற்கையையும் மனித நேயத்தையும்
கொன்று விட்டு
நீ என்ன சாதிப்பாய்?



இன்றும் உன் இனம்
அகதியாய்,அடிமையாய்
சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டு தான் இருக்கிறது..
மூவர்ணக் கொடியை
இதயத்தில் ஏற்றியும்
அடிமையாய் தான் வாழ்கிறோம்..
இருளில் இரை
தேடும் வெள்ளை புறா
விளை நிலங்கள்
விலை நிலங்களாயின
நீந்தி மகிழ்ந்த நீரோடையை
காணவில்லை..
பிற உயிர்களின் வாழ்விடத்தை
அபகரித்து மிருகமானாய்..
இயற்கையையும் மனித நேயத்தையும்
கொன்று விட்டு
நீ என்ன சாதிப்பாய்?

Friday, August 23, 2013

அம்மா

அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறன்
அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...
அவள் என்னை முத்தம் இடும் போதும் சொல்ல
 நினைக்கிறன்...
ஆனால் சொல்ல முடியவில்லை !!!
கடவுளே! எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு
அவளை "அம்மா " என்றழைக்க ...

Saturday, August 17, 2013

சுதந்திரம்

இருளில் பெற்று விட்டு
வெளிச்சத்தில் தொலைத்து விட்டோம்
நம் சுதந்திரத்தை..
எது எப்படியோ
தாயும் , தாய்நாடும்
இரு கண்கள்..
பெற்று எடுத்தவளுக்கும்
பெற்றுக் கொடுத்தவர்களுக்கும்
JAI HIND